Showing posts with label குற்றத்தின் பின்புலம். Show all posts
Showing posts with label குற்றத்தின் பின்புலம். Show all posts

Monday, June 13, 2016

பரவாதிருக்கட்டும் குற்றவியல் நோய் வரும் தலைமுறைக்கும்


வளர்ந்துவரும் உலகில் கூடவே வளர்கிறது குற்றவியலும். தினம் தினம் படிக்கும் செய்தித் தாளில்களில் தனக்கென்று ஒரு இடம்பிடித்துவிட்டது இக்குற்றவியல். “”ச்செ... என்ன பிறவியோ....” என்று அலுத்துக் கொண்டு
கடந்து செல்லும் நமக்கு தெரிவதில்லை, நாளை என் சம்பந்தப்பட்ட செய்தி கூட இதில் அடங்கலாம் என்று. இன்று நடக்கும் குற்றங்களில் முக்கால்வாசி
நம்மோடு நமக்கு மத்தியில் சாதாரணமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களாலேயே மேற்கொள்ளப்படுகிறது.